மதுரை ஆதீனத்தில் இன்று நடைபெற்ற வனத்துறையினரின்
அதிரடி சோதனையின் போது மதுரை ஆதீனமும் நித்தியானந்தாவும் அறைக்குள்ள
ஒளிந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற சோதனையின் போது மதுரை ஆதீனத்தை விசாரணைக்கு பொலிஸார் அழைத்தனர்.
அப்பொழுது ஒரு அறைக்குள் ஒளிந்து கொண்டதுடன் தரையில் படுத்துக்கொண்டு
தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறியிருக்கிறார். இருப்பினும் மிகவும்
வற்புறுத்தியே பொலிஸார் மதுரை ஆதீனத்தை வெளியில் வரவழைத்து விசாரணை
நடத்தினர்.
ஆனால் சுவாமி நித்தியானந்தா அறையை விட்டு வெளியே தலையைக்கூட காட்ட வில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து, ஆதீன மடத்தில் யானை தந்தங்கள், புலித்தோல்கள் இருக்குமானால்
உடனடியாக சோதனை நடத்துங்கள் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
பிறப்பித்தது. இதன் அடிப்படையிலேயே இன்று இந்த சோதனை நடைபெற்றது.