Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501

Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501
Online Job இலவச ஆலோசனைகளுக்கு

முதுகெழும்பு பிரச்சனையா?

முதுகெழும்பு பிரச்சனையா?


மூளையில் இருந்து உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் செல்லும் நரம்புகள் யாவும் முதுகெலும்பு வழியாக செல்கின்றன. இந்த முதுகெலும்பு அழுத்தப்படும் போது, அதிக அதிர்வுகளால் தாக்கப்படும் போது அதன் அருகே உள்ள நரம்புகளை அழுத்துகின்றன. அப்போது அது சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதிப்பு உண்டாகிறது. இதை தவிர்க்க நிமிர்ந்த நிலையில் அமர வேண்டும். வாகனங்களில் செல்லும் போது (அது இரண்டு சக்கரமோ, நான்கு சக்கரமோ) அதிகப்படியான அதிர்வுகள் முதுகெலும்புப் பகுதியைத் தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக எடையை முதுகை வளைத்துக்கொண்டு தூக்குவதும், அதிக சுமைகளை தூக்குவதும் பாதிப்பை உண்டாக்கும். முதுகுவலி வந்தால். பின்னால் சகல தொல்லைகளும் தொடரும். எனவே வீட்டிலோ, வாகனத்திலோ, அலுவலகத்திலோ நாம் அதிக நேரம் அமரும் இருக்கைகள் நம் முதுகெலும்பை வளைக்காமல் சுகமாக, நேராக, அமர உதவுவதாக இருக்க வேண்டும்.

நம் உடலமைப்புக்கு ஏற்றவகையில் இருக்க வேண்டும். முதுகெலும்பை சிறப்பாக பராமரிக்க பின்பக்கமாக வளையக்கூடிய புஜங்காசனம், தனுராசனம், சக்கராசனம், முன்பக்கமாக வளையக்கூடிய பஸ்சிமோத்தாசனம், ஹாலாசனம், முதுகை திருக்கக்கூடிய அர்த்தமத்தியந்திராசனம் போன்ற ஆசனங்கள் செய்யலாம்.

இவைகளை அவசரமில்லாமல் மெதுவாக பழக வேண்டும். இடையில் ஆசனம் செய்வதை நிறுத்திவிட்டால், மீண்டும் ஆரம்பிக்கும் போது புதியவர்களைப் போல வளையும் தன்மையையும், ஆசனத்தில் இருக்கும் நேரத்தையும் குறைக்க வேண்டும்.