Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501

Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501
Online Job இலவச ஆலோசனைகளுக்கு

இதயம் வலுவாக



* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.

* பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

* வயிற்று வலி குணமாக சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட குணமாகும்.

* முட்டை கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகச்சுருக்கம் மறையும்.

* அத்திப் பழத்தை உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் காலை, மாலை பாலில் உட்கொண்டு வந்தால் இதயம் வலுவாகும். இரத்தம் ஊறும்....
குழந்தைகளிடம்
**************

தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழர்’ என்பது நமது சமுதாயத்தில் வெறும் பழமொழி அளவில் மட்டுமே இருக்கிறது. பிள்ளைகளைப் பொறுத்தவரை ‘இதையெல்லாம் பெற்றோரிடம் கேட்கலாம்... இதையெல்லாம் கேட்கக் கூடாது’ என்கிற வேறுபாடு களோ, தயக்கங்களோ இருக்காது. அவர்களுக்குத் தேவை விளக்கம் அல்லது பதில். பெற்றோருக்குத்தான் பயமும் பதைபதைப்பும்... ‘முளைச்சு மூணு இலை விடலை... அதுக்குள்ள பேச்சைப் பாரு...’ என்றோ, ‘வயசுக்கேத்தபடி பேசணும்’ என்றோ பிள்ளைகளின் வாய்க்குப் பூ ட்டு போட்டு விடுவோம். அதிலும் குறிப்பாக காதல், செக்ஸ் பற்றியெல்லாம் பிள்ளைகள் வாயைத் திறந்தால் போதும், பெரும்பா லான பெற்றோருக்கு அடி வயிறு பிசையும்.

உங்கள் குழந்தைகளுக்கு காதல் பற்றி, உறவுகள் பற்றி, உடலுறவு பற்றியெல்லாம் ஆயிரமாயிரம் கேள்விகள் இருக்கும். அவற்றைப் பற் றிய சந்தேகங்களுக்கு விளக்கம் தேடி அவர்கள் நாடும் நபர்கள் பெற்றோராக இருக்கும்படி நடந்து கொள்வது அவசியம். அதற்கு முன்னோடியாக அவர்கள் இளம் குழந்தைகளாக இருக்கும் போதே தங்களைப்பற்றி (உடற்கூறு உள்பட) எந்தவித அச்சமும் இன்றி உங்களுடன் உரையாடும் வகையில் பார்த்துக்கொள்வது அவசியம்.

உங்கள் டீன் பிள்ளைகள் தன் உடல் பற்றியோ, எதிர்பாலினத்தாரின் உடலமைப்பு பற்றியோ, செக்ஸ் பற்றியோ ஏதேனும் கேள்வியு டன் உங்களிடம் வந்தால் உடனே பதைபதைக்காதீர்கள். பேச்சை மாற்றாதீர்கள். ‘வயசுக்கு மீறிப் பேசாதே’ எனக் கண்டிக்காதீர்கள். பொய்யான பதிலையும் தராதீர்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உங்கள் பிள்ளைகளிடம் அவர்களது சந்தேகம் குறி த்த பேச்சைத் தொடருங்கள். நேர்மையாகவும் கண்ணியமாகவும் விளக்கம் அளிக்க முயற்சி செய்யுங்கள்.

அத்தகைய உரையாடலைத் தொடங்கும் முன் நீங்கள் சில விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டியதும் அவசியம். செக்ஸ் ரீதி யாக ஆரோக்கியமாக இருப்பதைப் பற்றி பள்ளியில் படிக்கிற உங்கள் டீன் ஏஜ் பிள்ளையிடம் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா?

உங்களுடைய டீன் ஏஜில் நீங்கள் சந்தித்த முதல் காதல் பற்றி உங்கள் பிள்ளையிடம் பேசியிருக்கிறீர்களா? அதைப் பற்றி இப்போது எப்படி உணர்கிறீர்கள்?

எதிர்பாலினத்தாரிடம் உங்களுக்கு டீன் ஏஜில் ஏற்பட்ட முதல் உறவு பற்றிப் பேசியிருக்கிறீர்களா? எதிர்பாலினத்தாரிடம் உங்கள் பிள்ளை உறவு கொள்ள முனையும் போது அதற்கான எல்லை என்ன என்பதை யார், எப்படி முடிவு செய்கிறார்கள்? விளைவுகளுக்கு யார் பொறுப்பு என விளக்கியிருக்கிறீர்களா? டீன் ஏஜில் சாதாரணமாக ஒருவருக்கு ஏற்படக்கூடிய செக்ஸ் உணர்வுகளின் உந்து தல் பற்றிப் பேசியிருக்கிறீர்களா? திருமணத்துக்கு முன் உடலுறவு கூடாது என்பது பற்றிய உங்கள் கருத்து?

பெண் குழந்தைகளாக இருந்தால் திருமணத்துக்கு முன் கருத்தடை மாத்திரை உபயோகிக்கிற கலாசாரம் பற்றிப் பேசியிருக்கிறீர்களா? பாதுகாப்பான உடலுறவு பற்றி உரையாடுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இந்த விஷயங்களில் எல்லாம் உங்களுக்குத் தெளி வான கருத்து இருக்குமேயானால் செக்ஸ் மற்றும் உறவு முறை குறித்த உங்கள் பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வதும் சுல பமாக இருக்கும். இல்லையென்றால் முதலில் இந்த விஷயங்களைப் பற்றி சிந்தித்துத் தெளிவடைவது முக்கியம்.

அந்தப் பேச்சை எப்படித் தொடங்குவது என்பதில் உங்களுக்குத் தயக்கமிருந்தால் சினிமாவில் அல்லது சின்னத்திரையில் அப்படி யொரு காட்சி வரும்போது அதையே உங்கள் உரையாடலுக்கான ஆரம்பமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த விஷயங்கள் பற் றிய உங்கள் கருத்துகளைத் தெளிவாகவும் உறுதியாகவும் உங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்வது முக்கியம். ஒருவேளை உங் களுக்கே அந்த விஷயங்களில் தெளிவின்றி இருந்தாலும் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் பிள்ளையுடன் சேர்ந்து அதைப் பற்றி தெளிவடையும் ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள்.

அப்படிப் பேசும் போது லெக்சர் அடிக்கிற தொனியில் நீங்கள் நினைப்பதை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் உங்கள் பிள்ளைகள் தரப்பு கருத்துக்களையும் கேட்டறியுங்கள். அந்த விஷயங்கள் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்றும், என்ன நினைக்கிறார்கள் என்றும் கேளுங்கள். மேலும் அவர்களுக்கு எந்த நோக்கில் ஆர்வம் இருக்கிறதோ அந்த நோக்கில் பேச்சைத் தொடருங்கள். அப்போதுதான் அவர்கள் ஏதேனும் தவறாகப் புரிந்து கொண்டிருந்தாலும் உங்களால் சரிப்படுத்த முடியும். நீங்கள் விவாதிக்கிற விஷ யங்கள் குறித்து அவர்களுக்கு ஏதேனும் வருத்தங்கள் உண்டா என்பதையும் கேட்டறியுங்கள்.

உறவுகள் குறித்தும், உறவுகளுக்கு இடையிலான நெருக்கம் குறித்தும் குழந்தைகளிடம் மிக சீக்கிரமே பேச ஆரம்பிக்கலாம் பெற்றோர் களே. அவ்வாறு ஒளிவு மறைவின்றி உறையாடுவது அவர்களது மன ஆரோக்கியத்திற்கு அவசியம். மேலும் ஒரே ஒரு முறை மட்டும் அதைப் பற்றி பேசி விட்டுவிடலாம் என்று நினைக்காதீர்கள். அந்தப் பேச்சு அப்படியே அவர்களது விடலைப் பருவம் முடியும் வரை தொடர வேண்டும். இது ஆண், பெண் குழந்தைகள் என இருவருக்கும் பொருந்தும். அதே போல அம்மாக்களுக்கும் அப்பாக்களுக் கும் பொருந்தும். எல்லாக் குழந்தைகளும் இவ்விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம்.

அவர்கள் அதைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாவிட்டாலும் இவ்விஷயங்களைப் பற்றி அவ்வப்போது அவர்களிடம் உரையாடினால் அவர்கள் தவறான தகவலை பெற்றுவிடுவார்களோ என அச்சம் கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் மறுபடி யும் பேசும்போது அந்தத் தவறுகளை சரி செய்யலாம். நாளை அவர்கள் இதே விஷயங்களில் தவறு செய்வதையும் தவிர்க்கக்கூடும். இன்று இந்த விஷயங்களைப் பற்றிப் பேச எத்தனையோ புத்தகங்களும் வீடியோக்களும் கூட வந்து விட்டன.

அவற்றைக் கையாள்வதில் உங்களுடைய அறியாமை கூச்சமாக வெளிப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செக்ஸ் என்கிற விஷயத் துக்கான முழுமையான அர்த்தம் உணர உங்கள் பிள்ளைகளுக்கு நிறைய உதவி தேவை. தனது உடலின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இயங்குகிறது எனப் புரிந்து கொள்ளவும் அது முக்கியம். காதலுக்கும் காமத்துக்குமான அர்த்தத்தை விளக்குவதுடன் இரண்டுக்குமான வித்தியாசத்தையும் எடுத்துச் சொல்லுங்கள்.

உதாரணத்துக்கு இப்படியெல்லாம் பேசலாம்...

பள்ளிக்கூட பிள்ளைங்களுக்கு செக்ஸ் அனுபவத்துக்கான வயசு பத்தாது. அந்த வயசுல அவங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை ன்னு நினைக்கிறேன். ரிஸ்க்கும் அதிகம். நீ என்ன நினைக்கிறே?

நம்ம பாரம்பரியமும் கலாசாரமும் கல்யாணத்துக்குப் பிறகான அன்போட வெளிப்பாடுதான் உடலுறவுன்னு சொல்லுது. அதைப்பற்றி உன்னோட கருத்து என்ன?

செக்ஸை பத்திப் பேசறதோ, நினைக்கிறதோ தப்பில்லை. அது எல்லை மீறி அந்த வயசுல கர்ப்பமாகிறதோ, அந்த வயசுப் பெண்ணை கர்ப்பமாக்கறதோ ரொம்பத் தப்பு.

சில நேரங்கள்ல செக்ஸ் உணர்வுகள் அதீதமா தலைதூக்கலாம். அது சகஜம்தான். ஆனா, அதை எப்படிக் கட்டுப்படுத்தறதுங்கிறதைத் தெரிஞ்சுவச்சுக்கணும். ‘நோ’ சொல்லத் தெரிஞ்சுக்கணும்.

‘டீன்ஏஜ்லயே ஒரு குழந்தைக்கு அப்பாவாகறதால ஒருத்தன் பெரிய மனுஷனாயிட முடியாது. அது அதுக்குன்னு ஒரு வயசும் கால மும் இருக்கு. அது வரைக்கும் பொறுமை காக்கிறதுதான் புத்திசாலித்தனம்’ என ஆண் குழந்தைகளுக்கும்...

‘அன்பை நிரூபிக்கிறதாகவோ காதலைத் தக்க வைத்துக் கொள்ளவோ உடலுறவுதான் தீர்வுங்கிற எண்ணம் வேண்டாம். செக்ஸ் உறவு மூலமாதான் உங்க காதலை நிரூபிக்கணும்னு காதலன் வற்புறுத்தினா அதை விட்டு விலகறதுதான் உங்களுக்குப் பாதுகாப்பானது’ என பெண் குழந்தைகளுக்கும் தனித்தனியே புரிய வைக்கலாம்.

கடைசியாக ஒரு விஷயம்...

பிள்ளைகளிடம் உடலுறவு பற்றிப் பேசுவதாலேயே அவர்கள் அந்த விஷயத்தில் ஆர்வமாகி விடுவார்களோ என்கிற பயம் வேண்டாம். உங்களைத் தவிர வேறு யார் அவர்களுக்கு அவற்றையெல்லாம் மிகச் சரியாக போதித்து விடுவார்கள்!

கத்தரிக்காய் கத்தரிக்காய் கத்தரிக்காய்

பயன் அறிந்து சாப்பிடுவோம்: கத்தரிக்காய்
**************************************


இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடைகளில் ஒன்று காய்கறிகள். தினமும் நாம் சமைப்பதற்கு காய்கறிகளை பயன்படுத்துகிறோம். அந்த காய்கறிகளில் என்ன சத்துகள் இருக்கின்றது என்பதை நாம் தெரிந்து சாப்பிடுகிறோமா என்றால் இல்லை, எத்தனை பேருக்கு தெரியும் நாம் சாப்பிடும் காய்கறியில் என்ன சத்துகள் இருக்கிறது என்று.... கேரட், கறிவேப்பிலை கண்களுக்கு உகந்தது என பொதுவாக நாம் அறிந்திருப்போம். நாம் சாப்பிடும் காய்கறிகளின் பயன்கள் மற்றும் சத்துகளை அறிந்து சாப்பிட்டலாமே. காய்கறிகளில் நாம் முதலில் பார்க்கவிருப்பது கத்தரிக்காய்.

கத்தரிக்காய்

என்ன சத்துகள் இருக்கு: தினமும் கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்.. மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%, ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%, செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%, வைட்டமின் பி 32.6%, கலோரி 1%.

யாருக்கு நல்லது : ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம். மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம்.

யாருக்கு நல்லதல்ல: சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும் அரிப்பை தூண்டும்.. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது.

பலன்கள்: கத்தரிக்காய் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவை கட்டுப்படுத்த கத்தரிக்காயை பயன்படுத்துகின்றனர். நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். கொழுப்பின் அளவை கட்டுபடுத்தி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், ரத்த அழுத்தத்தை குறைக்கும். நீல நிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கருத்தடை அறுவை சிகிச்சை

கருத்தடை அறுவை சிகிச்சைக்குப் பிறகும் கருத்தரிக்கலாம்...


பத்து மாதம்சுமந்து பெற்றெடுத்த குழந்தையைப் பறி கொடுத்து நிற்கிற சோகம், எந்தத் தாய்க்கும் நகர வேதனையே. அதிலும் அது ஒரே குழந்தையாக இருந்து, ஓரு குழந்தை போதும் என்கிற முடிவில் குடும்பக் கட்டுப்பாடும் செய்துவிட்ட பெண்களின் நிலை சோகத்தின் உச்சம். இருந்த குழந்தையும் போயாச்சு இன்னொரு குழந்தைக்கும் வழியில்லை என்கிற நிலையில் அவர்களது நிலை?

குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் குழந்தை பிறக்க வழி செய்யும் வசதி மருத்துவத்தில் உண்டு என்கிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். டியூபோபிளாஸ்டி எனப்படுகிற அந்த அறுவை சிகிச்சையைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.

கர்ப்பப்பைக்கும் பக்கத்துல உள்ள குழாய்லதான் கருமுட்டையும், உயிரணுக்களும் சந்திக்கும். குழந்தை வேண்டாம்னு முடிவு பண்றவங்களுக்கு, இந்த பாதையை வெட்டிட்டா, அந்த சந்திப்பு நிகழாது. கருமுட்டை உற்பத்தி இருக்கும். ஆனா அது உயிரணுக்களை சந்திக்க வாய்ப்பில்லாம, கர்ப்பம் தரிக்காது. இதைத்தான் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைனு சொல்றோம்.

இதை பண்ணின பிறகு சில பெண்களுக்கு துரதிர்ஷ்டவசமா, முதல் குழந்தை இறந்து போகலாம். இன்னொரு குழந்தை வேணும்னு நினைக்கிறவங்களுக்கு வெட்டப்பட்ட குழாய்களை மறுபடி சேர்த்து தைக்கிறதுத்தான் டியூபோபிளாஸ்டினு பேர் குடும்பக் கட்டுப்பாடு அறுவைக்குப் பிறகு அந்தக் குழாய்களோட நீளம் ஒரளவு குறையும். போதுமான நீளம் இருக்கிற பட்சத்துல டியூபோபிளாஸ்டி சிகிச்சை சாத்தியம்.

முன்னலாம் வயிற்றை கிழிச்சி பெரிய ஆபரேஷனா பண்ணிட்டிருந்த இந்த சிகிச்சையை இன்னிக்கு வயிற்ற கிழிக்காம லேப்ராஸ்கோப் முறைலயே பண்ணிடலாம். மறுபடி இணைச்சு தைக்கப்பட்ட குழாய்கள் சரியா இயங்குதானு சரி பார்க்க, அதுக்குள்ள ஒரு விதமான 'டை' மாதிரியான திரவத்தைச் செலுத்திப் பார்ப்போம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு மாசம் பொறுத்திருந்து அடுத்தடுத்த மாசங்கள்ல அவங்க கருத்தரிக்க முயற்சிக்கலாம்.

கருமுட்டை உற்பத்தி நல்லா இருக்கிற வயசு வரை இந்த சிகிச்சை பலன் தரும். அதே சமயம் இது 100 சதவீதம் பலனளிக்கக் கூடியதுனு சொல்ல முடியாது. குழாய்களோட செயல்திறன்ல கோளாறு இருந்தாலோ, அதுக்குள்ள தொற்று ஏற்பட்டிருந்தாலோ இந்த சிகிச்சை பலன் தராமப் போகலாம். டியூபோபிளாஸ்டி முறைல குழந்தை பெற முடியாதவங்க டெஸ்ட் டியூப் முறை பலன் தரும்

குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்

'தாயின் பேச்சு' குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்
************************************************

தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர்.அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என நம்புகின்றனர்.

ஆனால் இவற்றைவிட குழந்தைகளிடம் தாய் தொடர்ந்து பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தையின் மூளை வளர்ச்சி அடைந்து அறிவுத்திறனும் வளரும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

லண்டனில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழ கத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதுபற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் பிறந்த 3 மாதமே ஆன 50 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தினார்கள்.

அந்த குழந்தைகளிடம் அவர்களின் தாய்மார்களை அடிக்கடி பேச்சு கொடுக்கும்படி தெரிவித்தனர். மேலும், மீன், மாடு போன்றவற்றின் படங்களை காட்டி அவற்றின், பெயர்களை கற்றுக் கொடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.

அவர்கள் கொடுத்த பயிற்சியின்படி 3 மாத குழந்தைகள் படங்களை பார்த்து அவற்றின் பெயர்களை உச்சரிக்க தொடங்கினர். மேலும் பல படங்களின் மூலம் அவற்றின் பெயர்களை தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளிடம் தாய்மார்கள் பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தைகளின் அறிவுத்திறன் வளரும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்...